×

சர்க்கார் பெரியபாளையத்தில் உள்ள பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தை கமிஷ்னர் ஆய்வு

திருப்பூர்,பிப்.26:திருப்பூர் மாநகராட்சி கமிஷ்னர் பவன்குமார் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளையும் ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் சர்க்கார் பெரியபாளையத்தில் உள்ள பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தினை ஆய்வு செய்தார். அப்போது அங்கு மேற்கொள்ளப்படும் பணிகள் பாதுகாப்பாக இருக்கிறதா? என்பது உள்பட அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்துகொண்டார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags : Sarkar Periyapalayam ,
× RELATED பத்தாம் வகுப்பு தேர்ச்சியில் ஆர்கேஆர் கல்வி நிறுவனம் சாதனை